Author: trttamilolli
இணையத்தில் வெளியான ஜனாதிபதி மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சுகாதார பாஸ் விபரங்கள் இணையத்தில் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார பாஸ் (pass sanitaire) தொடர்பான விபரங்கள் மிக பாதுகாப்பானது, இரகசியமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இம்மானுவல்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை
கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்வதேச அளவில் கண்டனத்துக்கு வழிவகுத்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் முழு நாட்டையும் தங்கள் வசமாக்கிய தலிபான்மேலும் படிக்க...
கனேடிய நாடாளுமன்றத் தேர்தல்: மூன்றாவது முறையாகப் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டுள்ளார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அதிகாலை 1:40 நிலவரப்படி மக்களவையில் உள்ள 338 இடங்களில் 156 இடங்களில் வெற்றிபெற்று முன்னிலைப் பெறுகின்றது. 2019ஆம் ஆண்டின்மேலும் படிக்க...
மன்னாரின் மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் கொரோனா தொற்றால் காலமானார்!
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது 80ஆவது வயதில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார். கடந்த 12 ஆம் திகதிமேலும் படிக்க...
அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் கொலைக்கு ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்!
அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த 2006ஆம் ஆண்டு லண்டனின் மில்லினியம் ஹோட்டலில் விஷம் கலந்த கிரீன் டீ குடித்துமேலும் படிக்க...
அமெரிக்கா பயணமாகிறார் மோடி!
ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைமேலும் படிக்க...
இந்தியாவில் கருக் கலைப்புக்கு அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு!
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய நிலையில், கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர்கள் கருகலைப்புக்கு அனுமதி கோரிமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப் படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறுமேலும் படிக்க...
ரோம் சாசனம்- சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால்மேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரை!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமானது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்துமேலும் படிக்க...
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாமியார்-மருமகள் போட்டி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்குமேலும் படிக்க...
ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அபார வெற்றி பெற்றது. 450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்தமேலும் படிக்க...
ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து வடகிழக்கே 1,593 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதுமேலும் படிக்க...
ஐ.நாவில் பருவநிலை மாற்றம் குறித்து வலியுறுத்த இந்தியா திட்டம்!
பருவநிலை மாற்றம், தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஐ.நா பொதுசபையில் விவாதிக்குமாறு வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.நாவுக்கான இந்திய தூதுர் டி.எஸ் திருமூர்த்தி தெரிவிக்கையில், இந்தியாவுக்கு தற்போதைய ஐ.நா பொதுச் சபை கூட்டம் பல வகையில்மேலும் படிக்க...
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் – பல திருத்தச் சட்டங்கள் முன்வைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இந்தவார நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, இன்றும் நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அதனடிப்படையில், கட்டளைகள் மற்றும்மேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் – ஜனாதிபதி நாளை உரை
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மேலும் படிக்க...
டொலர் பற்றாக்குறையே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் – மத்தியவங்கி ஆளுநர்
வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும் சமையல் எரிவாயுவினையும் இறக்குமதி செய்ய முடியாதமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் இலாபம் கருதியே அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை மறுப்பதிகாவும்மேலும் படிக்க...
ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களால் ஏற்பட்ட முரண்பாடு: கூட்டமைப்பிடம் ரெலோ முக்கிய கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களால்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- …
- 827
- மேலும் படிக்க