Main Menu

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் – ஜனாதிபதி நாளை உரை

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது.

இந்த கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் நாளைய தினம் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள உணவுக்கட்டமைப்பு கூட்டத்தொடரிலும் எதிர்வரும் 24ஆம் திகதி எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலின்போதும் ஜனாதிபதி தனது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...