Main Menu

ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களால் ஏற்பட்ட முரண்பாடு: கூட்டமைப்பிடம் ரெலோ முக்கிய கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களால் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...