Main Menu

அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் – நாடாளுமன்றில் விசேட பிரேரணை

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக விசேட பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்தப் பிரேரணையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கவுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...