துயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் (08/07/2020)
தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசமணி அவர்களின் அன்பு கணவரும் , சுபத்திரா, அம்பிகா, ராஜன், சிவா, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் , சந்திரசேகரன், ரவீந்திரநாதன், ராகினி, யோகேஸ்வரி,றஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சதீஸ், தர்சிகா, சுவர்ணா, தோமஸ், சுரேஸ், ஜீவிதன், ஜோதிகா, அபர்ணா, அஜய், சந்தோஸ், சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும், ஹரிணியின் பூட்டனும் ஆவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.
கிரியை
Monday, 13 Jul 2020 9:00 AM – 12:00 PM
SAAL 2000 Zarim Gmbh
Schlodderdicher Weg, 51469 Bergisch Gladbach, Germany
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
இப்பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!