Day: September 21, 2020
உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!
உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து அதிகமானோர் குணமடையும் நாடுகளின் பட்டியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் உலகில் கொரோனாவிலிருந்து குணமானோரின்மேலும் படிக்க...
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விரிவாக்கும் வழிகள் குறித்து அவுஸ்ரேலியா – இலங்கை பேச்சு
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மொரைஸ் பெய்ன், மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு மேலும் படிக்க...
20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் – அரசாங்கம் உறுதி
20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 20வது திருத்தம் குறித்து வெளியான வர்த்தமானிஅறிவித்தலை எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீளப்பெறாது என கூறினார்.மேலும் படிக்க...
16 வயது சிறுவன் காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கு
16 வயதுடைய சிறுவன் ஒருவனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். Rambouillet நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Rambouillet (Yvelines) நகரில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த மகிழுந்து நிற்காமல் காவல்துறை அதிகாரிகளைமேலும் படிக்க...
உள்ளிருப்பு காலத்தில் பதிவான அதிகூடிய குடும்ப வன்முறை
கொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருபு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போது இதுவரை இல்லாத அளவு குடும்ப வன்முறை பதிவகியுள்ளது. Hubertine Auclert association எனும் நிறுவனம் கடந்த பல வாரங்களாக இல் து பிரான்சுக்குள் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. அதன் பின்னர்,மேலும் படிக்க...
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனை கடந்தது!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியனைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் 70இலட்சத்து நான்காயிரத்து 768பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் அதிக கொவிட்-19 பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும்மேலும் படிக்க...
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, ‘ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்காமேலும் படிக்க...
பொதுக் கடன் 80% ஆக அதிகரிக்கும் – ஜேர்மன் நிதி அமைச்சர்
கொரோனா வைரஸ் நெருக்கடியின் முடிவில் ஜேர்மனியின் பொருளாதார உற்பத்தியில் பொதுக் கடன் 80% ஐ எட்டும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 75% ஆக உயரும்மேலும் படிக்க...
கனடாவில் 11 வாரங்கள் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் டர்னர் காலமானார்
1980 களில் 11 வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் தனது 91 வயதில் காலமானார். நாட்டின் 17 வது பிரதமராக பணியாற்றிய டர்னர், 1984 இல் லிபரல் கட்சி அரசாங்கத்தின் தலைமையில் குறுகிய காலம்மேலும் படிக்க...
இத்தாலியில் தேர்தல்களுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது!
இத்தாலியில், ஏழு பிராந்திய தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அரசியலமைப்பு வாக்கெடுப்பிலும் இத்தாலியர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்களிப்பு அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் இரவு 11 மணி வரை இடம்பெறுவதுடன் மறுநாள்மேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி
இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய பொலிஸ் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் : தேர்தலை ஒத்தி வைக்குமாறு மதத்தலைவர்கள், வல்லுநர்கள் கோரிக்கை
இந்தோனேசியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட தேர்தலை ஒத்திவைக்குமாறு மதக் குழுக்கள் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி உள்ளிட்ட வல்லுநர்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்துமேலும் படிக்க...
சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமாக கூறப்படும் தாஜ்மஹால் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்றுமேலும் படிக்க...
சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்றால் ஏன் பாகிஸ்தானுடன் நடத்தக் கூடாது _ பரூக் அப்துல்லா கேள்வி!
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசாங்கம் ஏன் ஜம்மு – காஷ்மீர் பிரச்சினைத் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு – காஷ்மீர்மேலும் படிக்க...
தென்னிலங்கை அரசியல் தரப்புக்களிடம் அவதானமாக இருக்குமாறு தமிழ் கட்சிகளுக்கு சரவணபவன் எச்சரிக்கை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ள தமிழ் கட்சிகளைப் பிளவுப்படுத்த தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிக்கலாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேடமேலும் படிக்க...
மனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும்மேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு அறிவிப்பு
20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “நாளை 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில்மேலும் படிக்க...