Day: March 5, 2020
கொரோனாவின் அச்சுறுத்தலினை எதிர் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது உலக வங்கி!
கொரோனாவின் அச்சுறுத்தலினை எதிர்கொள்வதற்காக ஒரு தொகை நிதியினை ஒதுக்கீடு செய்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 67 நாடுகளில் பரவியுள்ளது. இவற்றில் பல நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதிமேலும் படிக்க...
செல்லப்பிராணிகள் இறக்குமதிக்கு தடை விதித்தது உக்ரைன்!
சீனாவிலிருந்து செல்லப்பிராணிகளை இறக்குமதி செய்வதற்கு உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஹொங் கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,மேலும் படிக்க...
கலிபோர்னியாவில் அவசரகால நிலை பிரகடனம்
கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முதல் மரணம் பதிவானதைத் தொடர்ந்து குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, இந்தியா போன்றமேலும் படிக்க...
ஆந்திர முதல்வரைச் சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!
தமிழக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்ப நேற்று இடம்பெற்ற நிலையில் கிருஷ்ணா நதிநீரைக் கூடுதலாக விடுவிக்குமாறும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் படிக்க...
நிர்பயா கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிடும் இறுதித் திகதியை அறிவித்தது நீதிமன்றம்!
நிர்பயா கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நால்வரும் எதிர்வரும் 20ஆம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களின் தூக்குத் தண்டனைக்கான திகதியை அறிவிக்குமாறு கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மேலும் படிக்க...
பட்டதாரிகளின் நியமனம் இடைநிறுத்தம் – முக்கிய தகவலை வெளியிட்டார் பந்துல
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை அரசாங்க தகவல் திணைக்களமேலும் படிக்க...
வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமானது. நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தத் துடுப்பாட்டப் போட்டி இன்றிலிருந்துமேலும் படிக்க...
பிரபல பாடசாலை ஒன்றின் 50க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வாரியபொல நகரில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 50க்கும் அதிகமான மாணவர்கள் விஷ புகையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதேச குப்பை பகுதி ஒன்றில் பரவிய தீயிணைத் தொடர்ந்து ஏற்பட்ட நச்சு புகை காரணமாக மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் எனமேலும் படிக்க...
யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் – அமைச்சரவையில் ஆலோசனை
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கொங்ரிட் பெனல்களினாலான நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல் தொடர்பாக அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் காபாந்து அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.மேலும் படிக்க...