Day: November 19, 2019
அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது
விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துமேலும் படிக்க...
மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
மாலி நாட்டின் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, மாலி மற்றும் நைஜர் ராணுவம்மேலும் படிக்க...
கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
தூத்துக்குடி தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது. மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால்,மேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பந்தன் முக்கிய கோரிக்கை
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம்மேலும் படிக்க...
“சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு தேவை”
நான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி, எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும், எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். எனக்குத் தேவையானது அனைவரும் மதிப்புடன் வாழக்கூடிய சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஆதரவு என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வமேலும் படிக்க...
சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு
சபரிமலை செல்ல 319 இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து 139 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனைமேலும் படிக்க...
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள பியாங்கோ கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த சுரங்கத்தில் 35 தொழிலாளர்கள் வேலைமேலும் படிக்க...
முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
ஹொங்கொங்கில் புதிய கைதி பறிமாற்ற சட்டமூலகத்தை முற்றிலும் கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்த போதும், சீனாவிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் கலகமடக்கும் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமேலும் படிக்க...
இந்திரா காந்தியின் பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதைமேலும் படிக்க...
உலகத் தமிழர்களுக்கான ஒரே தேசியத் தலைவர் பிரபாகரன்தான் – கருணா
உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன் என்றால் அது தலைவர் பிரபாகரன் மாத்திரம்தான் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி உரிமைகளை பெற வேண்டும்- ராம்
தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்களது உரிமைகளைப் பெற வேண்டுமென இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்.ராம் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கிலும் கிழக்கிலும் உள்ளமேலும் படிக்க...
தமிழக அரசியல் வாதிகளுக்கு நாமலின் அறிவிப்பு
ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தாமல் உருப்படியாக எதனையாவது செய்யுங்களென தமிழக அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். நாமல் ராஜபக்ஷ, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காகமேலும் படிக்க...
தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் தமிழர்கள் சிங்களவர்களுக்கே வாக்களிக்கின்றனர் – சி.வி.கே.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் சிங்கள வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த கடிதத்தில் அவர் மேலும்மேலும் படிக்க...
ஜனாதிபதி கோத்தாபயவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அரசியல் புரிந்துணர்வை மேலும் விரிவுபடுத்தி, இராஜதந்திர ரீதியான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்மேலும் படிக்க...
திருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி
இந்தியா சென்னையில் திருமணம் முடிந்து தேனிலவுக்காக சென்ற இளம் ஜோடியில் கணவனை இழந்த புதுமணப்பெண்ணின் கண்ணீர் காண்போரை பதறவைக்கிறது. தனியார் நிறுவனமொன்றி பணிபுரிபவரே அரவிந்த். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன்மேலும் படிக்க...
அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன?- இவ்வார இறுதிக்குள் தீர்மானம்
தேர்தல் நிறைவடைந்து புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இவ்வாரத்துக்குள் இறுதி தீர்மானமெடுப்பதற்கு சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர்மேலும் படிக்க...