இந்திரா காந்தியின் பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி, இன்று காலை மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் நாடு முழுவதிலும் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அந்தந்த பகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.