Day: November 16, 2019
யாழ்.மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா?
யாழ்.மாவட்டத்தில் சுண்டுகுழி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மற்றும் அதனை அண்மித்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது தொடர்பில் யாழ்.மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவினரை தொடர்பு கொண்டு வினவிய போது, வாக்களிப்பு நிலையங்களுக்குமேலும் படிக்க...
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச் சோதனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை!
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச்சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேர்தல் இடம்பெறும் நிலையில், தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி இந்த வீதிச்சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதென இராணுவத் தரப்பிற்கு சுட்டிக்காட்டியதையடுத்து, பளை மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் அமைக்கப்பட்டமேலும் படிக்க...
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த 13ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், 48 மணித்தியால அமைதியான காலத்தின் பின்னர் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கிறது.மேலும் படிக்க...
70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்
தாயகத்தில் பேசாலையை சேர்ந்த பிரான்சில் Mulhouse நகரில் வசிக்கும் திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ் அவர்கள் 16ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார். இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.நெவிஸ் பிலிப்மேலும் படிக்க...
ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் – எகிப்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எகிப்தின் முடிவை எதிர்த்து பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து சுமார் 20 மில்லியன் டொலர் பெறுமதியான இருபது ‘Su-35’ ஜெட் விமானங்களை வாங்க எகிப்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் ரஷ்யாவுடனான எகிப்தின்மேலும் படிக்க...
3000 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயில்களின் நகரம் பாகிஸ்தானில் கண்டுப்பிடிப்பு!
இந்து கோயில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாட் மாவட்டத்தில் குறித்த நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பஜீரா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள குறித்த நகரம் 5000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ
அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் டசின் கணக்கான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதுடன் பாதுகாப்பு அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர். இதன்படி அடுத்த வாரம் வெப்பமான வானிலைமேலும் படிக்க...
ஹொங்கொங்க் போராட்டங்களுக்கு எதிராக சீன ஆதரவாளர்கள் பேரணி!
ஹொங்கொங்கில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகவும், ஹொங்கொங் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்தும் சீனர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றைமேலும் படிக்க...
வன்முறை இல்லாத வாக்கெடுப்புக்கு ஐரோப்பிய தேர்தல் கண் காணிப்பாளர்கள் அழைப்பு !
அநுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, வன்முறை இல்லாத தேர்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் உறுப்பினர் மரிசா மத்தியாஸ், இந்தமேலும் படிக்க...
வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தலைவர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு
வடக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர்மேலும் படிக்க...