Main Menu

யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச் சோதனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை!

யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச்சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தேர்தல் இடம்பெறும் நிலையில், தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி இந்த வீதிச்சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதென இராணுவத் தரப்பிற்கு சுட்டிக்காட்டியதையடுத்து, பளை மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் அமைக்கப்பட்ட இராணுவச் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் திணைக்களகத்தின் இந்த நடவடிக்கையால் இராணுவம் வழமையான அடாவடி செய்ய முடியாது தடுமாறுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை இராணுவத் தளபதி மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

பகிரவும்...