Day: September 19, 2019
ஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசதியக் கட்சியிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராகக் களமிறங்கினால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சுதந்திர கட்சி தயாராகவுள்ளதாக அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்மேலும் படிக்க...
தினேஷ் – ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்
ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார். அத்துடன் தேர்தல் ஒன்று இடம்பெறும்போது இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்குமேலும் படிக்க...
முத்தரப்பு ரி-20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தியது நெதர்லாந்து!
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரி-20 உலகக்கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளுக்கான முன்னோட்ட தொடராக இத்தொடர் நடைபெறுகின்றது. இந்த முத்தரப்பு ரி-20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக்மேலும் படிக்க...
19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன்
இலங்கை 19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன் இடம்பிடித்துள்ளார். தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி நேபாளத்தில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இலங்கை 19வயதுப்பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணியில் கிளிநொச்சியை சேர்ந்த தேனுயன் என்ற மாணவன்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கிளைகளை விரிவு படுத்த உள்ளதாக ஜேர்மனிய நிறுவனம் அறிவிப்பு
பிரித்தானியாவில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தவுள்ளதாக ஜேர்மனிய வர்த்தக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான Aldi இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனில்மேலும் படிக்க...
கடும் வெப்பம் – தேன் உற்பத்தி பாதிப்பு!
பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதம் நிலவிய கடும் வெப்பம் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தோல்மேலும் படிக்க...
விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு
விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம் வழங்கப்படவுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக துப்பாக்கி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மனிதர்களைச் சுமந்து செல்லும் ரொக்கெட்டுகளை காடுகள் நிறைந்த கிழக்குப் பகுதிக்கு அனுப்ப ரஷ்யா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் தரையிறங்கும் விண்வெளி வீரர்கள்மேலும் படிக்க...
விக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா
இஸ்ரோ அனுப்பிய சந்திரயாண் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை என நாசா அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளனர். குறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்குமேலும் படிக்க...
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான உள்ளடக்கங்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச அளவில் நடைபெற்று வரும்மேலும் படிக்க...
சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து!
அமைச்சர் சஜித் பிரேமதாச வடக்கிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி மற்றும் மன்னார் தேசிய பாடசாலைகளுக்கு வீடமைப்பு மற்றும்மேலும் படிக்க...
பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்கத்தடை: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியே பறக்க அனுமதி மறுத்திருப்பதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்பரப்பின் வழியேமேலும் படிக்க...
மாபெரும் பேரணிகளை நடாத்த மஹிந்த அணி தீர்மானம்!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் மாபெரும் பேரணிகளை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மிக முக்கிய கலந்துரையாடல் நேற்றிரவு இடம்பெற்றிருந்தது. மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது!
இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இரு முக்கிய கட்சிகளும் சம எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றியதால் அங்கு ஆட்சிமேலும் படிக்க...
கூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்கள் தீர்வுகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் – சி.வி.கே
தமிழர்களுக்கு தீர்வு வழங்குவோம் என கூறி கூட்டமைப்பிடம் ஆதரவு கோருபவர்கள், எந்த விடயத்தில் எவ்வாறான தீர்வுகளை வழங்குவார்களென பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலைமேலும் படிக்க...