Main Menu

19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன்

இலங்கை 19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன் இடம்பிடித்துள்ளார்.

தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி நேபாளத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த தொடரில் விளையாடவுள்ள இலங்கை 19வயதுப்பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணியில் கிளிநொச்சியை சேர்ந்த தேனுயன் என்ற மாணவன் இடம்பிடித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த தொடரில் தேனுயன் சாதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பகிரவும்...