பிரித்தானியாவில் கிளைகளை விரிவு படுத்த உள்ளதாக ஜேர்மனிய நிறுவனம் அறிவிப்பு
பிரித்தானியாவில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தவுள்ளதாக ஜேர்மனிய வர்த்தக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான Aldi இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டனில் 45 முதல் 100 கிளைகளை குறித்த நிறுவனம் நிறுவ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2021ஆம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை திறந்து, 5000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு முடிவில் தற்போது இருக்கும் 840 தளங்களை 1,200 தளங்களாக விரிவுபடுத்துவதே தங்கள் இலக்கு எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.