Day: September 10, 2019
தென் ஆப்பிரிக்காவில் வெளிநாட்டினர் கடைகள் மீது தாக்குதல்: 12 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெளிநாட்டினரின் கடைகளை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள்மேலும் படிக்க...
சொத்து விவகாரம்: தமிழ் அமைச்சர் உட்பட 8 பேருக்கு எதிராக முறைப்பாடு
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான சொத்து அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறியமைக்காக தமிழ் அமைச்சர், சஜித் பிரேமதாச உட்பட 8 பேருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் பிரிவு 4 (அ) (ii) இன் கீழ்,மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியினையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஜோன் செனவிரத்ன
நாட்டிலுள்ள அனைத்து மக்களும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செனவிரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுன,மேலும் படிக்க...
பிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி
பிரிட்டனில் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்த நினைத்த பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை எம்பிக்கள் முறியடித்தனர். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதனால் பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதாமேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் பொறாமையால் எனது பயணத்தை விமர்சனம் செய்கிறார் – எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமையால் எனது பயணத்தை விமர்சனம் செய்கிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கேள்வி:- கோட், சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம், நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்திருக்கின்றீர்களே? பதில்:- வெளிநாட்டிற்கு நாம்மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக குற்றச்சாட்டு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு, இந்தியா மிரட்டியதே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பத்து வீரர்கள்,மேலும் படிக்க...
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கையின் பத்து முன்னணி வீரர்கள் விலகல்!
பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரிலிருந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் பத்து முன்னணி வீரர்கள்; விலகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற, பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியினருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்மேலும் படிக்க...
ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது!
ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதானமேலும் படிக்க...
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும்: ஜேர்மனி
ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா பிரெக்ஸிற் தொடர்பான தமது தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதைத் தவிர்ப்பதுமேலும் படிக்க...
40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!
உலகளாவிய ரீதியாக 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2010 ஆம்மேலும் படிக்க...
பருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன்
உலக நாடுகள் பருவநிலை மாற்றத்திற்குக் கட்டாயம் தயாராகவேண்டும் என ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்திற்குத் தற்போது இருந்தே சிறந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இழப்புக்கள் அதிகரிக்கம் என்றும் அவர் எச்சரிக்கைமேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது
சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான 2ஆவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது. அதில், தூய்மைமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என குற்றச்சாட்டு
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையை வண்மையாக கண்டிப்பதாகவும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. சுதந்திர ஊடக இயக்கம் இன்றுமேலும் படிக்க...
இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரைற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அம்மையார் இலங்கை குறித்து எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இந்தமேலும் படிக்க...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, நடைமுறைக்கு வரவுள்ள புதிய விடயம்..!
இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான்மேலும் படிக்க...
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம் : பிரதமர்
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம். எனினும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதாரத்திலும், வீதிப்போக்குவரத்துக் கட்டமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதனடிப்படையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில்மேலும் படிக்க...