Main Menu

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம் : பிரதமர்

பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம்  இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.

எனினும் தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதாரத்திலும், வீதிப்போக்குவரத்துக் கட்டமைப்புக்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

 அதனடிப்படையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரநிலையமாக எம்மை வலுப்படுத்திக் கொள்வதையும், கொழும்பை அழகானதும் பொருளாதார வர்த்தக மையமாக உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பகிரவும்...