Main Menu

ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி!

ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர்.

மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும் போது இது கிட்டத்தட்ட பாதியாகும்.

2000ஆம் ஆண்டில், ஆங்கிலேயரிடம் இருந்து சீன ஆட்சிக்கு ஹொங்கொங் திரும்பிய பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முந்தைய சாதனை 43.6 சதவீதமாக இருந்தது.

குறைந்த வாக்குப்பதிவு புதிய சட்டமன்றத்தின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று சில பார்வையாளர்கள் கூறினாலும், ஹொங்கொங் தலைவர் கேரி லாம் ஒரு அறிக்கையில், 1.3 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகள் பதிவானது மேம்படுத்தப்பட்ட தேர்தல் முறைக்கான ஆதரவு’ என்று கூறினார்.

தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது. ஆனால், இது நாட்டின் ஜனநாயகக் குரல்களை முடக்கும் செயல் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

லெக்கோ, ஹொங்கொங்கின் மினி- நாடாளுமன்றம், நகரத்தில் சட்டங்களை உருவாக்கி திருத்தும் சக்திவாய்ந்த அமைப்பாகும். 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 மட்டுமே பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தேர்தல் குலுக்கலின் கீழ், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் வீதம் பாதியில் இருந்து கால் பங்கிற்கும் குறைவாக அல்லது 20 இடங்களுக்குக் குறைக்கப்பட்டது.

பெய்ஜிங் விசுவாசிகளைக் கொண்ட குழுவால் நாற்பது இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மீதமுள்ள 30 இடங்கள் செயற்பாட்டுத் தொகுதிகள் எனப்படும் நிதி மற்றும் பொறியியல் போன்ற தொழில்முறை மற்றும் வணிகத் துறைகளால் நிரப்பப்பட்டன.

பகிரவும்...