Main Menu

வவுனியாவில் கவிச் சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

குறித்த நிகழ்வு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த அனைவரினாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் பார்த்தீபனால் சிறப்புரையும்  நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் ஜெகதீஸ்வரன் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் பார்த்தீபன், நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...