Main Menu

வடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் அப்பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகின்றதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்றய தினம் நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்திற்கு பாதை விடவில்லை என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவம் முரண்பட்டுள்ளது.

இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக தெரியவருகின்றது.

பகிரவும்...