Main Menu

யோகானந்தன் ஜெயா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் உதவிகள்

திரு.திரவியநாதன் ஐயா,
பொறுப்பாளர்,
சமுகப்பணி பிரிவு,
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி.
12.04.2016

கனம் ஐயா அவர்களுக்கு,

யோகானந்தன் ஜெயா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் உதவிகள்

ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தங்களின் ஒழுங்கமைப்பில் லண்டனைச்சேர்ந்த யோகானந்தன் ஜெயா அவர்கள் அனுப்பிய நிதியில், தாலிக்குளத்தில் வசித்துவரும் கணவரை இழந்தும், மகன் ஒருவர் காணாமல் போகச்செய்யப்பட்டும் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்துவரும் சடாசிவம் சரஸ்வதி என்பவருக்கு அவரது தற்காலிக வீட்டை புனரமைப்பதற்கு 20,000 ரூபாய்கள் பெறுமதியான தகரங்கள், மரங்கள், ரீப்பைகள் பொருட்களாக வழங்கப்பட்டன.

தரணிக்குளத்தில் வசித்துவரும் கை ஒன்றை இழந்துள்ள வீ.லலிதாதேவி என்பவருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக 30,000 ரூபாய்கள் நிதியும் வழங்கப்பட்டன.

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினருக்கும், லண்டனைச்சேர்ந்த யோகானந்தன் ஜெயா அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புடன்,
ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.

20160412_121414 20160412_121446 image-c7f5b782c2669f44a6482cc5d8b4d80f32697beab49d6a2d1947c52b3ffb346d-V image-70b7253d843b3546c369076c0466cde80e1d048570967530e363914add7ed494-V

20160412_120827 20160412_112909

பகிரவும்...