Main Menu

யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசர உதவி..

வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாசாளா திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செயவோம் என்ற செயல் திட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஒன்றான. வட்டுக்கோட்;டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசர உதவி தொடர்பில் புலம் பெயர் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகைப் பணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரிடம் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்களால் அவ் அமைப்பினரிடம ஒப்படை கடந்த 16.07.2015 அன்று ஒப்படைக்கப்படடது.

இவ் விடயம் தொடர்பில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் குறிப்பிடுகையில் மேற்படி யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசர உதவி தொடர்பில் வடடுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கோரிக்கையை தழிழ் அலை ஊடாக நான் தெரிவித்த போது உதவும் மனப்பான்மை கொண்ட அன்பு உள்ளங்கள் இருவர் அனுப்பிய ஒரு தொகைப்பனம் இன்று இங்கு ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டவர்களின் பெயரில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரின் பற்றுச் சீட்டு வழங்கப்படுகின்றது. இவ் பற்றுச் சீட்டுக்கள் உரியவர்கட்கும் வானொலியினருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேற்குறித்த த்த பாதிப்புக்கு உட்ப்டோர்  தொடாபில் இவர்கள்  வவுனியா மாவட்டத்தில் வைரவப் புளியங்குளம் பகுதியில் உயிரிளை எனும் குறித்த யுத்தத்தால் பாதிகப்பட்டவர்களுக்கான இணையம் அமைந்துள்ளது. இவ் அமைப்பின் ஊடாகவே மட்டக்களப்பு,முல்லைத்தீவு,வவுனியா,கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ளோருக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்குறித்த தாகத்தில் உள்ள பதிகப்பட்டோர் குறித்த மாவட்டங்ளில் பல் வேறு இங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதாக அங்கிருந்து கிடைக்கும் மருத்துவ தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

இவவாறான பாதிப்புக்கு உட்ப்டோர் எண்ணிக்கை தற்போது கிடைக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் 166 ஆகும்.
இவர்கள் தொடாடபிலான தங்களல் கோரப்பட்மைக்கு அமைவாக தனித்தனியாக விபரங்களை உடனடியாக வழங்கமுடியாத நிலையில் உள்ள நிலையில் தங்களால் அனுப்பப்படும் உதவிகள் குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டட விபரம், ஆதாரம் மற்றும் புகைப்படங்கள் தங்களுக்கு விபரமாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொளளப்படும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் 55 பேர் தற்போது படுக்கைப் புண் நிலைக்கு உள்ளாதானதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனக்குறிப்பிட்டார்.

P1060818 P1060816 9

 

பகிரவும்...