Main Menu

யாழில் இராணுவ வசமிருந்த 234 ஏக்கர் காணி ஜனாதிபதியால் விவசாயிகளிடம் கையளிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று வியாழக்கிழமை (22) பயிர்செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலவசமாக 2 மில்லியன் காணி உறுதிகளை வழங்குவதற்கான உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 408 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் ஒட்டகப்புலத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...