நாடளுமன்ற தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் – மஹிந்த
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்;பதாக மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாங்கள் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் ஆனால் பசில் முன்வைத்த யோசனையே சிறப்பானது – நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தி அதன் பின்னர் ஜனாதிபதிதேர்தலை நடத்தவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற எந்த கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்வெற்றியை பெறும் எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச நியாயத்தன்மை காணப்படவேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்