Main Menu

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிப்பு!

ஸ்பெயினில் மிகவும் பழமை வாய்ந்த வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

டையோலித்திக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்த கட்டடங்கள் கிமு ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது கண்டறிப்பட்டது.

இந்தக் கட்டடங்ளில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தியபோது, குறித்த பகுதியில் சிதைவடைந்த நிலையில் வாள் ஒன்று மண்ணுக்குள் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வாளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ரோமானியர்கள் அல்லது ஏனையவர்களின் படையெடுப்பின் போது பயன்பட்டதாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வாள் சுமார் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பகிரவும்...