Main Menu

மாற்று பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் கைது!

போலந்தில் பேரணி நடத்திய மாற்று பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாற்று பாலினத்தவர்களுக்கும் சம உரிமை கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பியாலைஸ்டொக் நகரில் நடத்தப்படட பேரணியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாற்றுப் பாலின ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான எதிரணி ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பேரணியை குழப்பும் முயற்சிகளில் ஈடுப்பட்டதுடன், சிலரை தாக்கவும் செய்தனர்.

ஆர்வலர்களைத் தாக்கியது மாத்திரமன்றி, ஓரினச்சேர்க்கையாளர்களை அவமானப்படுத்தும் வகையில் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இந்த சம்பவத்தில் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்துள்ளனர்.

பகிரவும்...