Main Menu

மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது – வேலூர் வெற்றி குறித்து ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வேலூர் தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாகி இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதையடுத்து ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். வேலூர் தேர்தல் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

ஆளும் கட்சியின் அதிகார பலத்தை மீறி வேலூரில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வேலூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாகி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பகிரவும்...