Main Menu

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் நேற்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பெரிய குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.

கைதான நபரிடமிருந்து 02 கிலோ 140 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares