Main Menu

துயர் பகிர்வோம் – திரு. வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்)

தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் தற்போது (La Courneuve) பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்கள் (07.04.2021) புதன் கிழமை அன்று பிரான்ஸ்சில் காலமானா‌ர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்.
மகேஸ்வரியின் அன்பு கணவரும், சசிகலா, சசிதரன், வளர்மதி ஆகியோரின் அன்புத் தந்தையும்.

வசந்தன், ராஜரூபி(ரூபி) இளங்கோவன் ஆகியோரின் அன்பு மாமனரும், காலஞ்சென்ற கனகராசா (இலங்கை), கமலவேணி காலஞ்சென்ற விசயரெத்தினம் (இலங்கை),காலஞ்சென்ற அன்னசோதி (இலங்கை), யோகம்மா (இலங்கை), மங்கயற்கரசி (இலங்கை) நாகலட்சுமி (சுவிஸ்), கேதிஸ்வரராசா (லண்டன்), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

மகேந்திரன் (சுவிஸ்), யோகலிங்கம் (சுவிஸ்) இராசேந்திரன் (பிரான்ஸ்), அகிலேஸ்வரி(ஈஸ்வரி)(இலங்கை), பாலச்சந்திரன் (பிரான்ஸ்) கனகேஸ்வரி (சுவிஸ்), குலேந்திரன்(ராசன்) (பிரான்ஸ்) தேவேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

காலஞ்சென்ற குலசேகரம் பிள்ளை, கண்மணி, இராசலிங்கம் (S.R) செல்வராணி, காலம்சென்றவர்களான சிவபாதமணி நாகலட்சுமி ஆகியோரின் அன்பு சம்மந்தியும்.

விக்ரன், விவியன், விறம்யா, சன்ஜய், றித்திக், பிரவின், அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைத்து உறவுகளுக்கும் அன்பான வேண்டுகோள். எங்கள் அன்புக்குரிய அப்பாவின் இறந்த செய்தி அறிந்து எங்களுடன் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். அப்பாவின் இறுதி நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் வீட்டில் இருந்தவாறே அப்பாவின் ஆத்மா சாந்திக்காய் பிராத்திக்குமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி
செல்வராசன் குடும்பம்
சோமசுந்தரம் குடும்பம்

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பகிரவும்...