Main Menu

துயர் பகிர்வோம் – திரு. செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்)

மன்னார் முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) அவர்கள் 08.01.2022 அன்று சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் , திரு திருமதி செபஸ்தியான் செபமாலை அவர்களின் அன்பு மகனும், திரு திருமதி சவிரிமுத்து பிரான்சிஸ்கா ஆகியோரின் அன்பு மருமகனும் றோஸ்மேரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். இவர் ஆனந்தராசா (பிரான்ஸ்நாட்டுக்கூத்து கலைஞர் ஆனந்தன் ), இன்பராசா (பிரான்ஸ்), அருள்பணி அன்புராசா (அன்னை இல்லம், கிளிநொச்சி) திருமகள் (ஆசிரியை, மன்/உயிலங்குளம், றோ.த.க. பாடசாலை), மலர்விழி (ஆசிரியை, மன்/பரிகாரிகண்டல், அ.த.க. பாடசாலை), கயல்விழி (முகாமையாளர், இலங்கை வங்கி, நானாட்டான்) ஆகியோரின் அன்புத் தந்தையும் சசிகலா (பிரான்ஸ்), கயல்விழி (பிரான்ஸ்), சந்தியோகு (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மன்னார்), வைத்தியர் ஒஸ்மன் சாள்ஸ் (சுகாதார வைத்திய அதிகாரி, முசலி), நிக்சன் (முகாமைத்துவ சேவை உதவியாளர், வலயக் கல்வி அலுவலகம், மடு) ஆகியோரின் அன்பு மாமனாரும், செலின், அடல், லீசா, மக்டல், சாகித்தியன், பூர்விகா, கவ்சிகன், காவியா, கவிநயன், கவிப்பிரியன், ஆதித்தியன், ஆதனா ஆகியோரின் அன்புப் பேரனும், கலாபூஷணம் சீமான், அமரர் அன்னம்மா, அமரர் திரேசம்மா, அமரர் சந்தியோகு, காலபூஷணம் மாசிலாமணி (ஓய்வுபெற்ற கால்நடை உத்தியோகஸ்தர்), சவினம்மா, அமரர் இயேசுதாசன், அருள்சகோதரி எலிசபெத் (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், செபமாலை, அமரர் வெற்றிநாயகம், றஞ்சிதம், மரியநாயகம் (பிரான்ஸ்), அந்தோனிப்பிள்ளை, றீற்றா, குணசீலன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகஸ்தர்), யோண்போல் (டென்மார்க்), றொபின்சன் (லண்டன்), ஜேம்ஸ் கிறிஸ்ரி (லண்டன்), அருள்சகோதரி பிரியஷாந்தி (பிரதி அதிபர், புனித பற்றிமா கல்லூரி, கல்முனை) ஆகியோரின் அன்பு மைந்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 11ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 01 மணிக்கு அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து 2.30 மணிக்கு முருங்கன் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, செம்மண்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி கலையக குடும்பமும் இணைந்து கொள்வதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.


பகிரவும்...