Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (07/02/2022)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி காந்திமலர் ஜெயக்குமார் அவர்கள் 29ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.

அன்னார் காலம்சென்றவர்களான வினாயகமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம் சென்றவர்களான பொலிஸ் உத்தியோகத்தர் கைலாயபிள்ளை பிறிசிலா தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும், புஷ்பராணி (பேபி சிவா, TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) தெய்வலதா (பவா) பிரேமலதா, ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகுமார் (சிவா),சுப்பிரமணியம், யோகராசா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்றவர்களான கனகவிநாயகம், சந்திரகாந்தன், சந்திரகுமார், மற்றும் ஜெயகாந்தன் (யாழ்ப்பாணம்), விஜயகாந்தன் (லண்டன்), சோதிமலர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலம்சென்றவர்களான சுகுமார், சிவகுமார், சூரியகுமாரி, சுந்தரகுமார் மற்றும் ரூபா குமாரி (யாழ்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், அஸ்வின், அலெக்சன், ஷாகிசன், ஷாபிசா, சதுஷா, சாய்சரண் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 9ம்திகதி பெப்ரவரி மாதம் புதன்கிழமை மதியம் 13h30-14h30 வரை மயான மண்டபத்தில் இடம்பெற்று, 14h30 மணிக்கு
Crématorium de Champigny sur Marne
480,avenue Maurice Thorez
94500 Champigny-sur-Marne

மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
அன்பு மருமகன் சிவா – 06 64 66 71 41
மகள் குட்டி – 07 81 39 91 88
ரவி – 06 52 33 96 85

இவ் பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

பகிரவும்...