Main Menu

தலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் முடிவு?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அகிலவிராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார்.

எனவே கட்சியின் தலைமை பதவிக்காக ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...