Main Menu

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர்கள் குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...