டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் 85ஆயிரத்து 140பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 76ஆவது நாடாக விளங்கும் டென்மார்க்கில் இதுவரை 858பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 605பேர் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16ஆயிரத்து 866பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 38பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை 67ஆயிரத்து 416பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.