Main Menu

ஊழல் விவகாரம்: ஆஸ்திரியா நிதியமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஊழல் விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரியாவின் முன்னாள் நிதியமைச்சர் கர்ல் ஹினிஸ் கிரேசருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியன்னா நீதிமன்றம் உத்தரவிட்டது.

லஞ்ச விவகாரம் 2011ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து முன்னாள் நிதிமயமைச்சர் உட்பட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில், தனியார் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் நிதியமைச்சர் கர்ல்-ஹினிஸ் கிரேசர் லஞ்சம் பெற்றது உண்மைதான் என தெரியவந்தது.
இதையடுத்து, முன்னாள் நிதியமைச்சர் கர்ல் – ஹினிஸ் கிரேசருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியன்னா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆஸ்திரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாக இந்த ஊழல் கருதப்படுகின்றது.

48 வயதான கர்ல் -ஹினிஸ் கிரேசர், 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை நிதியமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான 60 ஆயிரம் குடியிருப்புகள் விற்பனைக்காக ஏலம் விடப்பட்டன. அந்த ஏலத்தில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.

அதில், மற்ற போட்டியாளர் நிறுவனங்கள் 960 மில்லியன் யூரோக்களை ஏலத்தொகையாக செலுத்த ஒப்பந்தபுள்ளிகளை கொடுத்துள்ளனர்.

ஆனால், அந்த ஏலத்தொகையை விட 1 மில்லியன் யூரோக்களை அதிகமாக செலுத்த ஒரு தனியார் நிறுவனம் ஏல ஒப்பந்தப்புள்ளிகளை கொடுத்துள்ளது.

இதன் மூலம் 1 யூரோ அதிகமாக ஒப்பந்த புள்ளி வழங்கிய அந்நிறுவனம் அரசாங்க குடியிருப்புகளை வாங்கிக்கொண்டது.

இதில் மற்ற நிறுவனங்கள் 960 மில்லியன் யூரோவுக்குதான் ஏலத்தொகைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கியுள்ளது என்ற தகவலை நிதியமைச்சர் கர்ல்-ஹினிஸ் கிரோசர் உட்பட சில அதிகாரிகள் ஏலம் எடுத்த அந்த தனியார் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூறிய தகவலையடுத்து, ஒப்பந்த புள்ளியில் 1 யூரோ அதிகமாக அந்த தனியார் நிறுவனம் கோரி குடியிருப்புகள் விற்பனையை கைப்பற்றியது. இதற்காக அந்நிறுவனம் நிதியமைச்சர் கர்ல்-ஹினிஸ் கிரோசர் உள்பட சில அதிகாரிகளுக்கு பல மில்லியன் யூரோக்களை லஞ்சமாக வழங்கியுள்ளது.

பகிரவும்...