Main Menu

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 659பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் மொத்தமாக 14ஆயிரத்து 76பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்து 450பேர் பாதிக்கப்பட்டதோடு, 288பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்து எட்டாயிரத்து 483பேர் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 561பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 79ஆயிரத்து 100பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...