Main Menu

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 228பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145பேர் உயிரிழந்துள்ளார்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 97 இலட்சத்து 359பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 11ஆயிரத்து 28பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 331பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 546பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் மூன்று இலட்சத்து 81ஆயிரம் பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...