Main Menu

ஜூஸ் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவில்  குளிர்பானம்  என நினைத்து மதுவை  குடித்த  சிறுவன்  உயிரிழந்த அதிர்ச்சியில்  தாத்தாவும்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. வேலூர்  மாவட்டத்தில்  திருப்பாக்குட்டை பகுதியில்  வசித்து  வந்தவர்  சின்னசாமி. இவர்  கூலி  வேலை  செய்து  வருகிறார். இவர்  நேற்று  முன்தினம்  மது  வாங்கி வீட்டில்  வைத்துள்ளார்.  இந்நிலையில் சின்னசாமி  வைத்திருந்த தின்பண்டங்களை  சாப்பிட  அவரது  பேரன் ரித்திஷ்(5)  வீட்டிற்கு  வந்துள்ளார். அப்போது அவர்   குடித்து மீதி வைத்திருந்த மதுவை  குளிர்பானம்  என நினைத்து முழுவதும்  குடித்துள்ளார். டிவி பார்த்து கொண்டிருந்த  சின்னசாமி  சிறுவன் செய்த செயலை  கவனிக்க தவறிவிட்டார். சிறுது  நேரம்  கழித்து  சிறுவனுக்கு இருமல்  ஏற்பட்டுள்ளது.  சிறுவன்  மது அருந்தியதை  அறிந்து  அதிர்ச்சியடைந்த சின்னசாமி  சிறுவனின்  பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால்  சிறுவனின் பெற்றோர்  அவரை  கடுமையாக திட்டியதால்  அந்த  இடத்திலே  மாரடைப்பு ஏற்பட்டு  அவர்  உயிரிழந்தார். இதையடுத்து   சிறுவன் மருத்துவமனையில்  அனுமதித்து  தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு  வந்தது. இருப்பினும்  சிகிச்சை  பலன் கொடுக்காமல்  5 வயது  சிறுவன் பரிதாபமாக  உயிரிழந்தார்.  ஒரே குடும்பத்தில்  அடுத்தடுத்து  இரண்டு பேர் உயிரிழந்த  சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்...