Main Menu

இந்திய வெளிவிவகார செயலாளர் – பிரதமர் மஹிந்த சந்திப்பு

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் அலரிமாளிகையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வந்தடைந்தார்.

இதன்பின்னர் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளார்.

அதன்படி இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அவர், இந்தியா-இலங்கை உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பகிரவும்...