Main Menu

சொந்த செலவில் விண்வெளி சென்ற ஜப்பானியர் பத்திரமாக பூமி திரும்பினார்

சொந்த செலவில் விண்வெளி சென்ற ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ், பத்திரமாக பூமி திரும்பியுள்ளார்.

இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமை 46 வயதான யுசாகு மெசாவா, பெற்றார்.

மெசாவாவுடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரும் கடந்த 8ஆம் திகதி எம்20 என்ற ரஷ்ய விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்றனர்.

12 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்த யுசாகு மெசாவா உள்ளிட்ட 3 பேரும் அதே சோயுஸ் எம்20 விண்கலத்தில் நேற்று முன்தினம் இரவு பூமிக்கு புறப்பட்டனர்.

இந்த விண்கலம் ரஷ்ய நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) காலை 06:16 மணிக்கு கஸகஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பாலைவன பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது.

பகிரவும்...