Main Menu

சுதந்திரக் கட்சி அனைத்து அமைப்பாளர் களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று விசேட கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகமான டார்லி வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.

அதன்படி அனைத்து ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைமையின் உத்தரவை மீறி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.

இந்நிலையில் சுதந்திரக் கட்சி இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ளதுடன், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன, நிகழ்ச்சி நிரலில் இருந்து தனியாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பகிரவும்...