Main Menu

தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருந்த ரஷ்ய விமான சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

ரஷ்ய ஏரோஃப்ளோட் (Aeroflot) ஏர்லைன்ஸின் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வணிக விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து இலங்கைக்கான முதலாவது ஏரோஃப்ளோட் விமானம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.45மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அயர்லாந்தை தளமாகக்கொண்ட செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாடின் பேரில், ரஷ்ய ஏரோஃப்ளோட்டிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றம் ஜூன் 02ஆம் திகதி விதித்த தடை உத்தரவுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், இந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இலங்கைக்கு ரஷ்ய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...