Main Menu

சீனாவின் வளர்ச்சி பதற்றத்தை உருவாக்குகிறது- கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று காலை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் உரையாற்றினார். சீனா இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குவது போல வலைவிரித்து இலங்கையில் உள்ள இடங்களை எல்லாம் கைப்பற்றி வருகிறது. சீனாவின் இந்த வளர்ச்சி என்பது பதற்றத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி என்பது இலவச கொரோனா தடுப்பூசி உருவாக்குதல் போன்றது. இந்தியர்கள் கொரோனா தொற்றினை சிறப்பாக நிர்வகித்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். உலகம் இந்தியாவை பல எதிர்ப்பார்ப்புடன் பார்த்து வருகிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மொபைல் தயாரிப்பில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். பெண் குழந்தைகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது. முதல் உலக போருக்கு பின் இந்திய தலைவர்களுக்கு இந்தியர்களை கல்வி அறிவுமிக்கவர்களாக ஆக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதன் அடிப்படையில் உருவானது தான் கல்வி நிறுவனங்கள். கல்வி அறிவு மட்டுமின்றி நாட்டுப்பற்றையும் விதைக்க கல்வி நிறுவனங்கள் தேவைப்பட்டது. இந்திய கல்வி முறையானது தனித்துவமான பண்புகள் கொண்டது. இந்த தனித்துவம் தான் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உதவுவதுடன், சிறந்த பங்களிப்பையும் ஆற்றுகிறது. மத்திய அரசு நாட்டை ஒரே குடும்பமாக பார்த்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...