Main Menu

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை விசாரணை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.

இந்த வழக்கில் முதலமைச்சரை விசாரணை செய்யவேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ராஜாராமன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு  இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கறிஞர் ராஜாராமன் தாக்கல் செய்திருந்த மனுவில்,  “தந்தை,  மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்ததாக முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக மனுதாரர் கூறியிருந்தார்.

மேலும்  முதலமைச்சரின் பேச்சு குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கில் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும்”  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...