Main Menu

சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை

சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இருநாட்டு வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர்.

ஜி 20 உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளிய சவால்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அண்மைக் காலங்களில் சவூதியுடன் இந்தியாவின் நட்புறவு அபார வளரச்சியடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று பாதிப்பு காலங்களில் சவூதியில் உள்ள இந்தியர்களை கவனமாக அனுப்பி வைக்க சவூதி அரசு அளித்த ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்தியா-சவூதி நட்பை மேலும் வலுப்படுத்த இருதரப்பினரும் உறுதி கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...