Main Menu

சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

கோணாவில் கிழக்கு பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு பேரணி ஊற்றுபுலம் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

அப்பகுதியில் தொடர்ச்சியாகக் காணப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் வியாபாரம் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் எழுந்துள்ளதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான மு.சந்திரகுமார் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பிரதேச மக்களால் மகஜர் ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பகிரவும்...