Main Menu

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பாக நாளை விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிகழ்த்தப்பட்ட கொள்கைப் பிரகடன உரை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், நாளை பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணிவரையும், அதன் பின்னர் நாளை மறுதினம் பிற்பகல் 1.00 மணி முதல் 6.30 மணிவரையுமாக இரண்டு நாட்கள் முழுநாள் ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படும்.

விவாதம் நடத்தப்பட்டாலும் இது தொடர்பாக வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படாது. அத்தோடு சபை ஒத்திவைப்பு விவாதத்தின் பின்னர் ஜனவரி 09 ஆம் திகதி காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.மு.ஜயரட்ன தொடர்பாக அனுதாபப் பிரேரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

பகிரவும்...