Main Menu

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – டி.டி.வி தினகரன்!

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை பார்வையிட்டு நலம் விசாரிக்கச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “  சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை.

சசிகலாவுக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. அதனால் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். தேவைப்பட்டால் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூர் சிவாஜி நகர் போரிங் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலா அனுமதிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...