Main Menu

இரு தரப்பு உறவை உயரத்திற்கு கொண்டு செல்வோம் : ஜோ பைடனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து!

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன்.

உலகின் பொதுவான சவால்களை ஒருங்கிணைந்து போராடி, உலகில் அமைதி,  பாதுகாப்பை நிலைநாட்டுவோம். பொருளாதாரம் உட்பட இருதரப்பு உறவை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வோம்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...