Main Menu

கொரோனா தடுப்பூசி விநியோகம் : புதிய செயலியை அறிமுகம் செய்தது மத்திய அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தை கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கோ-வின் செயலி தடுப்பூசி அளிப்பவர்கள் பெறுவர்கள் போன்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உடையவர்கள் கோ-வின் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், அவர்களின் தகவல்கள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  தடுப்பூசி செலுத்திய பிறகு குறுந்தகவல் அனுப்பப்படும் எனவும்  க்யூ ஆர் சான்றிதழும் உருவாக்கப்படும் என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...