Main Menu

கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுதலை – யாழில் சம்பவம்

நாட்டில் முழுநேர பயண தடை அமுலிலுள்ள நிலையில், யாழ்ப்பாணம்- கொடிகாமத்திலுள்ள ஆலயமொன்றில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட மூவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம்- வரணி வடக்கு பகுதியிலுள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய ஆலயத்திற்கு சென்ற பொலிஸார், பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கடுமையாக எச்சரித்து, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

பகிரவும்...